என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703222304464045_Sri-Lankan-Navy-apprehended-8-Indian-fisherman_SECVPF.gif)
X
நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை
By
மாலை மலர்22 March 2017 4:18 PM GMT (Updated: 22 March 2017 5:34 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் செல்வதும், அவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில், மீண்டும் இலங்கை கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 8 பேர் எல்லை தாண்டி வந்ததாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
![](/uploads/BA966960-B5DF-40DE-B6A6-F1C05EEE9684_L_styvpf.gif)
நெடுந்தீவு அருகே ஒரு படகுடன் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் செல்வதும், அவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில், மீண்டும் இலங்கை கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 8 பேர் எல்லை தாண்டி வந்ததாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
![](/uploads/BA966960-B5DF-40DE-B6A6-F1C05EEE9684_L_styvpf.gif)
நெடுந்தீவு அருகே ஒரு படகுடன் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)