search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    டெல்லி மாணவன் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சுரண்டை:

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவன் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுரண்டை அண்ணா சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ், ஒன்றிய செயலாளர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலாளர் ராஜன் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் சித்திக் கண்டன உரையாற்றினார். மாநில ஓவியர் அணி துணைச் செயலாளர் முதல்வன், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், சந்திரன், தமிழ் செல்வன், முருகன், தென்காசி பிரபாகரன், ஹக்கிம், சிம்சோன், சுரண்டை கருப்பையா, ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிளை செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்

    Next Story
    ×