search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்: 240 பேர் கைது
    X

    வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்: 240 பேர் கைது

    வேலூரில் 2-வது நாளாக மறியல் செய்த 240-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    இந்த நிலையில் அறிவித்த படி, சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 2-வது நாளாக இன்றும் மறியல் போராட்டம் நடந்தது. 240-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×