search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு அலுவலகம் முற்றுகை
    X

    100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு அலுவலகம் முற்றுகை

    100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய தொகையை வழங்கக் கோரி 200 பேர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்

    கடம்பத்தூர் பேரம் பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் 200 பேர் ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல், சாலையோரப் புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

    அவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊதிய தொகையை வழங்கக் கோரி 200 பேர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து கடம் பத்தூர் வட்டார வளர்ச்சி தனி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித் தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×