search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு தோட்டத்தில் கூலித்தொழிலாளி வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நரையன்குளத்தைச் சேர்ந்தவர் மாயன். இவரது மகன் ஈஸ்வரன் (45). கூலித்தொழிலாளி.

    இவர் இன்று காலை, செண்பகத்தோப்பு ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மம்சாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈஸ்வரனை வெட்டிக் கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×