search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண் கைது
    X

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண் கைது

    சேலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது மாங்குப்பை. இந்த பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(வயது 45). இவர் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி அதை வீட்டுக்கு அருகில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். இதை அறிந்த பொதுமக்கள் சேலம் சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் பேரில் போலீசார் மல்லிகாவை கண்காணித்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் மல்லிகா வீட்டுக்கு அருகில் மறைத்து வைத்து இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×