search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயம்
    X

    மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயம்

    மெலட்டூர் அருகே விவசாய கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை கீழத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 68) விவசாய கூலித்தொழிலாளி.

    இவர் உடல்நலக்குறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி இந்திரா மெலட்டூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குபதிவு செய்து மாயமான சாமிநாதனை தேடி வருகின்றார்.

    Next Story
    ×