search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே தடுப்பு ஊசி போட்ட 2 வயது குழந்தை பலி
    X

    திருமங்கலம் அருகே தடுப்பு ஊசி போட்ட 2 வயது குழந்தை பலி

    திருமங்கலம் அருகே தடுப்பு ஊசி போட்டு 2 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 2 வயதில் கரண் என்ற ஆண் குழந்தை இருந்தது.

    4 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலத்தில் கரணுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதன் பிறகு 2 நாட்கள் நன்றாக இருந்த குழந்தைக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர்.

    எனினும் காய்ச்சல் அதிகமானதுடன் வாந்தியும் ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கரண், இன்று காலை பரிதாபமாக இறந்தான்.

    குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    Next Story
    ×