search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராவூரணி அருகே பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    பேராவூரணி அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

    பேராவூரணி அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியை அடுத்த நல்லூரை சேர்ந்த மாரிமுத்து மகன் பார்த்தசாரதி (வயது 32). இவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த மல்லிபட்டினத்தில் உள்ள ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலை முடிந்து சைக்கிளில் அம்மனி சத்திரம் அம்புலி ஆற்றுபாலம் வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சேதுபாவா சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான பார்த்த சாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×