search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தூரில் கொலை செய்யப்பட்ட பெண் வேலூரை சேர்ந்தவரா?: போலீசார் விசாரணை
    X

    சித்தூரில் கொலை செய்யப்பட்ட பெண் வேலூரை சேர்ந்தவரா?: போலீசார் விசாரணை

    சித்தூரில் கொலை செய்யப்பட்ட பெண் வேலூரை சேர்ந்தவரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெரிய தவனம்பள்ளி சென்னம்மா ஏரிகரை பகுதியில் உள்ள புதரில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தவனம்பள்ளி போலீசாருக்கு பிராமணபள்ளி கிராம நிர்வாக அலுவலர் யோகானந்த் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அந்த பெண்ணின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆந்திர மாநில எல்லை பகுதியான வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை ஆந்திர மாநில போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    அந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் சித்தூர் மாவட்ட போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×