search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எனக்கு கொலை மிரட்டல்: சி.ஆர்.சரஸ்வதி பேட்டி
    X

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எனக்கு கொலை மிரட்டல்: சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

    அதி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் பொறுப்பு என்று சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி போயஸ்கார்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் போயஸ்கார்டனை சுற்றி வருகிறார்கள். எனக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. செல்போன் மூலமாக மிரட்டுகிறார்கள்.

    அதி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் பொறுப்பு.

    கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்கிறார். அவரை புரட்சித் தலைவியின் ஆன்மா மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×