search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக எம்.பிக்கள் 20 பேர் டெல்லி புறப்பட்டனர்: ஓபிஎஸ்க்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு
    X

    அதிமுக எம்.பிக்கள் 20 பேர் டெல்லி புறப்பட்டனர்: ஓபிஎஸ்க்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு

    தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பிக்கள் 20 பேர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசியல் தற்போது மிகவும் சிக்கலான சூழல் நிலவி வருகிறது. நிலையான ஆட்சி அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வர வேண்டியுள்ளது.

    ஆளுநர் வித்யாசாகர் ராவின் சென்னை வருகை தாமதமாகி வருவதால் நிலைமை மேலும் நாளுக்கு நாள் குழப்பம் நீடித்து வருகிறது. ஆளுநர் சென்னை வந்தாலும் என்ன நடக்கும் என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பிக்கள் 20 பேர் இன்று மாலை 6 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இந்த அதிமுக எம்பிக்கள் குழுவில் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இருந்தனர். அதிமுக எம்பிக்கள் குழுவினர் ஜனாதிபதியை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ மனோகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பன்னீர் செல்வத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×