search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கள்ளக்காதலனுடன் மது குடித்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் ஆத்திரம்
    X

    திருப்பூரில் கள்ளக்காதலனுடன் மது குடித்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் ஆத்திரம்

    திருப்பூரில் கள்ளக்காதலனுடன் மது குடித்த மனைவியை கணவன் கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 36). பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (32). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் சசிகலாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதனால் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லா சமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று ஆனந்த், சசி கலாவை அழைத்து கொண்டு வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது ஆனந்த், சசிகலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். இதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் சசிகலாவுக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்த சசிகலாவுக்கு சிறிதுநேரத்தில் போதை தலைக்கேறியது.

    இதைதொடர்ந்து ஆனந்த், சசிகலா ஆகியோர் திருப்பூர் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் நடந்து வந்தனர். அப்போது சசிகலா போதையில் திடீரென அங்குள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

    உடனே ஆனந்த், மற்றும் அக்கம்பக்கத்தினர் சசிகலா வை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று விட்டு ஆனந்த், சசிகலாவை அவரது வீட்டுக்கு கொண்டு போய் விட்டார்.

    பின்னர் வீட்டில் போதையுடன் சசிகலா படுத்து கிடந்தார். அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், மனைவி சசிகலா மூக்கில் காயம் இருப்பதையும், மது வாசனை அடிப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் சசிகலாவிடம் கேட்டபோது, அவர் ஆனந்துடன் வெளியே சென்றதை கூறினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன் , சசிகலாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ஜெயச்சந்திரன், கள்ளக்காதலன் ஆனந்திடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×