search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி
    X

    பாகூர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

    பாகூர் அருகே சேலையில் தீப்பிடித்ததால் மூதாட்டி உடல் கருகி இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே கரையாம் புத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவகி (வயது 70). இவர்களுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ஏற்கனவே கணவரை இழந்த தேவகி தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று தேவகி குளிப்பதற்காக விறகு அடுப்பில் வென்னீர் வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. உடல் கருகிய நிலையில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை தேவகி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×