என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு: காவல்துறை கண்காணிப்பு சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு: காவல்துறை கண்காணிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702081149572903_Police-surveillance-for-Social-Media_SECVPF.gif)
X
சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு: காவல்துறை கண்காணிப்பு
By
மாலை மலர்8 Feb 2017 6:19 AM GMT (Updated: 8 Feb 2017 6:19 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது.
குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை பணிய வைத்தனர்.
அந்த பரபரப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு கூறிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் உலுக்கும் வகையில் மாறியுள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை பரவ விட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடுவார்களோ என்ற அச்சம் போலீசாரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அரசுக்கு எதிராக சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது.
குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை பணிய வைத்தனர்.
அந்த பரபரப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு கூறிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் உலுக்கும் வகையில் மாறியுள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை பரவ விட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடுவார்களோ என்ற அச்சம் போலீசாரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அரசுக்கு எதிராக சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)