search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சூட்கேஸ்
    X

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சூட்கேஸ்

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் கேட்பாரற்று மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போட்டி தேர்வுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக் கணக்கானோர் தினமும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் இன்று கேட்பாரற்ற நிலையில் ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் சூட்கேசை திறந்தனர். அப்போது அதில் பழைய துணிகளும், சில பேப்பர்களும் இருந்தன.

    வெடிகுண்டு இருக்குமா? என்ற பீதியில் வந்த போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மர்ம சூட்கேஸ் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருந்த பரபரப்பு போலீசாரின் சோதனைக்கு பின் அடங்கியது.

    Next Story
    ×