என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் வாய்க்காலில் மிதந்து வந்த பெண் பிணம்: போலீஸ் விசாரணை
திருப்பூர்:
திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் பிஏபி வாய்க்காலின் கிளை செல்கிறது. இங்கு அமராவதி அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் இன்று காலை அய்யப்பா நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதந்து வந்தது.
இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் தலை பகுதியில் வெட்டு காயம் இருந்தது. மேலும் அவர் ஜாக்கெட் மட்டும் அணிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் அவரை மர்ம கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
வாய்க்காலில் மிதந்து வந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து திருப்பூர் ரூரல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்