search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வாய்க்காலில் மிதந்து வந்த பெண் பிணம்: போலீஸ் விசாரணை
    X

    திருப்பூரில் வாய்க்காலில் மிதந்து வந்த பெண் பிணம்: போலீஸ் விசாரணை

    திருப்பூரில் இன்று காலை வாய்க்கால் தண்ணீரில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்து வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் பிஏபி வாய்க்காலின் கிளை செல்கிறது. இங்கு அமராவதி அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை அய்யப்பா நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதந்து வந்தது.

    இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டனர்.

    பிணமாக கிடந்த பெண்ணின் தலை பகுதியில் வெட்டு காயம் இருந்தது. மேலும் அவர் ஜாக்கெட் மட்டும் அணிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் அவரை மர்ம கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    வாய்க்காலில் மிதந்து வந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து திருப்பூர் ரூரல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×