என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோவையில் விஷம் குடித்த பள்ளி மாணவி: மருத்துவமனையில் அனுமதி கோவையில் விஷம் குடித்த பள்ளி மாணவி: மருத்துவமனையில் அனுமதி](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011246329215_school-student-drank-poison-in-Coimbatore-Admitted-to_SECVPF.gif)
X
கோவையில் விஷம் குடித்த பள்ளி மாணவி: மருத்துவமனையில் அனுமதி
By
மாலை மலர்1 Feb 2017 7:16 AM GMT (Updated: 1 Feb 2017 7:16 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவை அருகே பெற்றோர் திட்டியதால் சாணி பவுடரை குடித்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை ரத்தினபுரி அருள் நகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி. இவர்களது மகள் கார்த்திகா (வயது 13). அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கார்த்திகா டி.வி. பார்த்தார். அப்போது பெற்றோர் சத்தம் போட்டு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் வேதனையில் இருந்து வந்தார்.
இன்று காலை கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வழக்கம் போல் கார்த்திகாவும் பள்ளிக்கு சென்றார்.
இன்று காலை பள்ளியில் இருந்த கார்த்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள், சக மாணவிகளிடம், கார்த்திகாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் பெற்றோர் திட்டியதால் கார்த்திகா வீட்டில் வைத்து சாணி பவுடரை குடித்தது தெரிய வந்தது.
இதுபற்றி ரத்தினபுரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தொடர்ந்து மாணவி கார்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை ரத்தினபுரி அருள் நகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி. இவர்களது மகள் கார்த்திகா (வயது 13). அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கார்த்திகா டி.வி. பார்த்தார். அப்போது பெற்றோர் சத்தம் போட்டு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் வேதனையில் இருந்து வந்தார்.
இன்று காலை கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வழக்கம் போல் கார்த்திகாவும் பள்ளிக்கு சென்றார்.
இன்று காலை பள்ளியில் இருந்த கார்த்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள், சக மாணவிகளிடம், கார்த்திகாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் பெற்றோர் திட்டியதால் கார்த்திகா வீட்டில் வைத்து சாணி பவுடரை குடித்தது தெரிய வந்தது.
இதுபற்றி ரத்தினபுரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தொடர்ந்து மாணவி கார்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)