search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
    X

    செம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த முகமூடி கும்பல்

    செம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சின்னாளபட்டி:

    செம்பட்டி அருகே வீரக்கல் இந்திரா காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக ராஜகோபால் (வயது38), விற்பனையாளராக ராஜா (32) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 8½ மணி வரை விற்பனையான ரூ.73 ஆயிரத்தை மேற்பார்வையாளர் ராஜகோபால் வீட்டுக்கு எடுத்து சென்றார். அதன்பின்னர் விற்பனையாளர் ராஜா மட்டும் கடையில் இருந்தார்.

    சிறிது நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர். ராஜா அவர்களை தடுத்தார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கியதில் ராஜாவுக்கும், கொள்ளையர்களில் ஒருவனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    கொள்ளையர்கள் 8½ மணிக்கு பிறகு விற்பனையான 400 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கலாம். நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேற்பார்வையாளர் சற்று நேரத்திற்கு முன்பாக பெரிய தொகையை வீட்டிற்கு எடுத்து சென்றதால் அந்த பணம் தப்பியது.

    Next Story
    ×