என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசி அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
Byமாலை மலர்28 Jan 2017 2:55 PM GMT (Updated: 28 Jan 2017 2:55 PM GMT)
வந்தவாசி அருகே அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை, சென்னை வேளச்சேரியை சேர்ந்த டிரைவர் ஜெயபால் (வயது 55) என்பவர் ஓட்டினார். செய்யாறு பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் கண்டக்டராக இருந்தார். தென்கரை கிராமத்திற்கும், வல்லம் கிராமத்திற்கும் இடையே பஸ் சென்றபோது திடீரென்று ஆக்சில் உடைந்ததால் நிலை தடுமாறிய பஸ் சுகநதி ஆற்று பாலத்தின் மீது மோதி, ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லை.
இந்த விபத்தில் சேத்துப்பட்டை சேர்ந்த மகாலட்சுமி, கீழ்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரி, ராணி, கோட்டை அகரத்தை சேர்ந்தவர்கள் பரிமளா, பெருமாள், இவரது மனைவி லட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை, சென்னை வேளச்சேரியை சேர்ந்த டிரைவர் ஜெயபால் (வயது 55) என்பவர் ஓட்டினார். செய்யாறு பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் கண்டக்டராக இருந்தார். தென்கரை கிராமத்திற்கும், வல்லம் கிராமத்திற்கும் இடையே பஸ் சென்றபோது திடீரென்று ஆக்சில் உடைந்ததால் நிலை தடுமாறிய பஸ் சுகநதி ஆற்று பாலத்தின் மீது மோதி, ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லை.
இந்த விபத்தில் சேத்துப்பட்டை சேர்ந்த மகாலட்சுமி, கீழ்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரி, ராணி, கோட்டை அகரத்தை சேர்ந்தவர்கள் பரிமளா, பெருமாள், இவரது மனைவி லட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X