என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல்: 5 நாட்களுக்கு பின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் திடீர் வழக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல்: 5 நாட்களுக்கு பின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் திடீர் வழக்கு](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701251932064195_jallikattu-support-train-strike-dmk-mla-on-complaint_SECVPF.gif)
X
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல்: 5 நாட்களுக்கு பின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் திடீர் வழக்கு
By
மாலை மலர்25 Jan 2017 2:02 PM GMT (Updated: 25 Jan 2017 2:02 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ரெயில் மறியல் செய்தனர்.இந்நிலையில் 5 நாட்களுக்கு பின் போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் கடந்த 20-ந்தேதி கோட்டார் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 180 ஆண்கள், 20 பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று கோட்டார் போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், குழித்துறை நகரச் செயலாளர் ஆசைத்தம்பி உள்பட 145 பேர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி பெறாமல் நடைபெற்றதாக எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் உள்பட 145 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் கடந்த 20-ந்தேதி கோட்டார் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 180 ஆண்கள், 20 பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று கோட்டார் போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், குழித்துறை நகரச் செயலாளர் ஆசைத்தம்பி உள்பட 145 பேர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி பெறாமல் நடைபெற்றதாக எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் உள்பட 145 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)