search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்
    X

    திருமங்கலம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

    திருமங்கலம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பாண்டிலட்சுமி. இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் பாண்டிலட்சுமி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பாண்டிலட்சுமியை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான பாண்டிலட்சுமியை தேடி வருகிறார்.

    Next Story
    ×