என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பலி
Byமாலை மலர்25 Jan 2017 9:49 AM GMT (Updated: 25 Jan 2017 9:49 AM GMT)
சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கொண்டலாம்பட்டி:
சேலம், கொண்டலாம்பட்டி பி.நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி என்கிற அமல்ராஜ் (வயது 36). இவரது மகன் பிரதீபன் (6). இவன் அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அன்று காலையில் வழக்கம் போல் பிரதீபன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். அதன் பிறகு பள்ளியில் இருந்து வெளியே உள்ள சாலைக்கு வந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் பிரதீபன் மீது திடீரென மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரதீபன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து சேலம் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தது தம்மநாயக்கன்பட்டி மொரம்புகாடு பகுதியை சேர்ந்த துரைமுருகன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
சேலம், கொண்டலாம்பட்டி பி.நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி என்கிற அமல்ராஜ் (வயது 36). இவரது மகன் பிரதீபன் (6). இவன் அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அன்று காலையில் வழக்கம் போல் பிரதீபன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். அதன் பிறகு பள்ளியில் இருந்து வெளியே உள்ள சாலைக்கு வந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் பிரதீபன் மீது திடீரென மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரதீபன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து சேலம் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தது தம்மநாயக்கன்பட்டி மொரம்புகாடு பகுதியை சேர்ந்த துரைமுருகன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X