என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் தகராறு: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
Byமாலை மலர்6 Jan 2017 10:41 AM GMT (Updated: 6 Jan 2017 10:41 AM GMT)
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் முனியப்பன் சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகள் அஞ்சலி (வயது 15). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வரும். இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்தும் இவர்கள் கேட்காமல் தொடர்ந்து தகராறு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த அஞ்சலி வாழ்க்கை வெறுப்படைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து மாணவியை காப்பாற்றி அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இங்கு அஞ்சலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X