search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கணவர்கள் கைவிட்டதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருப்பூரில் கணவர்கள் கைவிட்டதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    திருப்பூரில் கணவர்கள் கைவிட்டதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஈஸ்வரி (வயது27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ஈஸ்வரிக்கும் மூர்த்தி என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவன் பாலமுருகன் கண்டித்தார்.

    இதனையடுத்து முதல் கணவரை விட்டு பிரிந்து மூர்த்தியுடன் ஈஸ்வரி சென்றார். இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பெரிச்சிபாளையத்தில் குடியிருந்து வந்தனர். இதனையறிந்த மூர்த்தியின் பெற்றோர் ஈஸ்வரியிடம் இருந்து பிரித்து மூர்த்தியை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் ஈஸ்வரி தவித்தார். முதல் கணவருடன் சென்று விடலாம் என நினைந்து அங்கு சென்றார். ஆனால் அவர் ஈஸ்வரியை ஏற்று கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையை தொலைத்த ஈஸ்வரி வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×