search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலத்தில் வாலிபர் கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது
    X

    குற்றாலத்தில் வாலிபர் கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது

    குற்றாலத்தில் வாலிபர் கொலை நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் இசக்கி லிங்கேஸ்வரன் (வயது 19). இவர் தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கடைக்கு வந்த இசக்கி லிங்கேஸ்வரனின் நண்பரான குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் அண்ணாநகரை சேர்ந்த மாணிக்கம் என்ற ரமேஷ் (19) என்பவர் இசக்கி லிங்கேஸ்வரனை குற்றாலம் திருவள்ளுவர் நகருக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் அங்கு மறைந்திருந்த ரமேசின் நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து இசக்கி லிங்கேஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலைசெய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த ரமேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையுண்ட இசக்கி லிங்கேஸ்வரனிடம் மாணிக்கம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு இசக்கி லிங்கேஸ்வரன் தன்னிடம் தற்போது பணம் இல்லை என கூறி உள்ளார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் ரமேஷ், தனது மற்றொரு நண்பரான கரிவலம்வந்தநல்லூர் பிரவின் (23) என்பவருடன் சேர்ந்து இசக்கி லிங்கேஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ரமேசின் நண்பர் பிரவினையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

    Next Story
    ×