search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவர்களுக்கு செக்ஸ் தொல்லை: சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
    X

    சிறுவர்களுக்கு செக்ஸ் தொல்லை: சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

    செங்குன்றத்தில் சிறுவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    புழல், லட்சுமிபுரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் நின்றனர். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் மாணவர்களிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இருவரும் அலறினார்கள்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாபு, வெங்கடேஷ், விஜய், வெங்கடேசன் என்பது தெரிந்தது.

    இதில் பாபு சட்டக் கல்லூரி மாணவர் ஆவார். வெங்கடேசும், விஜய்யும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் புழல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×