search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே 58 ஆடுகள் திருட்டு
    X

    பெரம்பலூர் அருகே 58 ஆடுகள் திருட்டு

    பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்படிருந்த 58 ஆடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள ஒகளூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர், பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் ராமசாமி என்பவரது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து, 450க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த செப். 5 ஆம் தேதி இரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 58 ஆடுகள் காணமால் போனதாம். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம்.

    இதுகுறித்து, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×