என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![செல்போன் வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செல்போன் வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2016/Nov/201611201838437810_Engineering-student-suicide-by-cellphone-not-buying-give_SECVPF.gif)
செல்போன் வாங்கித்தராததால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருப்பூர்:
திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர்.
மகன்கள் தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள். சுமதி டெய்லர் கடைக்கு சென்று மகன்களை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் சுமதியின் மூத்த மகன் சிவபாலன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சாதாரண செல்போனை வைத்திருந்தார்.
இவருடன் படிக்கும் மாணவர்கள் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தனர். அதில் உள்ள வாட்ஸ்- அப், பேஸ் புக் உள்ளிட்டவைகளை பார்த்து மகிழ்ந்தனர். இதேபோன்று விலை உயர்ந்த செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை சிவபாலனுக்கு வந்தது.
வீட்டிற்கு வந்த சிவபாலன் தனக்கு விலை உயர்ந்த செல்போன் வேண்டும் என்று தாயிடம் கேட்டார். இப்போது புதிய போன் வாங்கும் அளவுக்கு பணம் இல்லை. பின்னர் வாங்கித்தருகிறன் என்று சுமதி கூறினார்.
இதில் மனவேதனை அடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிவபாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற தாய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவபாலன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி துடித்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)