search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு, உஞ்சனை பகுதிகளில் 17-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    திருச்செங்கோடு, உஞ்சனை பகுதிகளில் 17-ந் தேதி மின் நிறுத்தம்

    திருச்செங்கோடு, உஞ்சனை 17-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, உஞ்சனை துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே, திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம் பாளையம், நாராயணபாளையம், அம்மா பாளையம், சீனிவாச பாளையம், தேவனங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், அணிமூர், ஆண்டிபாளையம், ஏமபள்ளி, விட்டம்பாளையம், தோக்கவாடி, செங்கோடப்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை மற்றும் கைலாசபாளையம் முதல் திருமங்கலம் வரை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதுபோல் உஞ்சனை பகுதிகளுக்கு உட்பட்ட சாலபாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையக்கவுண்டம் பாளையம், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85 கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப் பள்ளி, மாச்சம் பாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை திருச்செங்கோடு கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×