search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி மருத்துவமனையில் தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்
    X

    ஸ்டான்லி மருத்துவமனையில் தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்

    ஸ்டான்லி மருத்துவமனையில் தப்பியோடிய கைதியை பெண் போலீஸ் மடக்கி பிடித்தார். பின்னர் கைதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ராயபுரம்:

    காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சூர்யா (25). இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் பல வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் காசிமேடு துறைமுக போலீசார் வழிப்பறி வழக்கு சம்மந்தமாக நேற்று காலை சூர்யாவை கைது செய்தனர்.

    பின்னர் உடல் பரிசோதனைக்காக அவரை ஜீப்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் வந்து இறங்கியதும் சூர்யா போலீசாரின் கையை தட்டிவிட்டு தப்பி ஓடினான்.

    அவனை துரத்தியபடி 2 போலீசாரும் சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. சூர்யா அங்குள்ள கை-கால் ஒட்டு உறுப்பு (வார்டு எண் 701) வார்டில் புகுந்தான்.

    இதை அங்கு பணியில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனை பெண் போலீஸ் சிவகாமி பார்த்தார். அவர் சூர்யாவை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தார். பின்னர் சூர்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×