என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 30 ஆயிரம் வழக்குகள் விசாரணை தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 30 ஆயிரம் வழக்குகள் விசாரணை](https://img.maalaimalar.com/Articles/2016/Oct/201610081429255696_national-lok-adalat-30-thousand-cases-investigation-in-TN_SECVPF.gif)
X
தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 30 ஆயிரம் வழக்குகள் விசாரணை
By
மாலை மலர்8 Oct 2016 8:59 AM GMT (Updated: 8 Oct 2016 8:59 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேசிய லோக் அதாலத் மக்கள் மன்றத்தில் 30 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் எத்தனை வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சமரசத்துக்கு வருகிறது என்று இன்று மாலை தெரியவரும்.
சென்னை:
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் மன்றம் நடத்தப்படுகின்றன.
அக்டோபர் மாதத்துக்கான லோக் அதாலத் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.விமலா, கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையிலும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் தலைமையிலும் 4 அமர்வுகளும், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ் திரேட்டுகள் என்று 246 அமர்வுகள் என்று மொத்தம் 250 அமர்வுகள் இன்று வழக்குகளை விசாரித்து வருகின்றன.
இந்த அமர்வுகளில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்பநல வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான வழக்குகள் என்று 30 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் எத்தனை வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சமரசத்துக்கு வருகிறது? என்று இன்று மாலையில் தான் தெரியவரும்.
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் மன்றம் நடத்தப்படுகின்றன.
அக்டோபர் மாதத்துக்கான லோக் அதாலத் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.விமலா, கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையிலும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் தலைமையிலும் 4 அமர்வுகளும், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ் திரேட்டுகள் என்று 246 அமர்வுகள் என்று மொத்தம் 250 அமர்வுகள் இன்று வழக்குகளை விசாரித்து வருகின்றன.
இந்த அமர்வுகளில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்பநல வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான வழக்குகள் என்று 30 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் எத்தனை வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சமரசத்துக்கு வருகிறது? என்று இன்று மாலையில் தான் தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)