search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் போலி டாக்டர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை
    X

    வாணியம்பாடியில் போலி டாக்டர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை

    வாணியம்பாடியில் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் தமிழரசன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக வேலூர் மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் உஷா தலைமையில், மருத்துவ குழுவினர் புத்துகோவில் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆங்கில மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த தமிழரசன் நைசாக சென்று பின்புற கதவை மூடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மருத்துவ குழுவினர் அங்கிருந்த ஆங்கில மருந்து மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×