search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் - கேரளாவுக்கு காய்கறி மூட்டையில் கடத்திய 14 நரித்தோல்கள் பறிமுதல்
    X

    தமிழகம் - கேரளாவுக்கு காய்கறி மூட்டையில் கடத்திய 14 நரித்தோல்கள் பறிமுதல்

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற நரித்தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கூடலூர்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு புலித்தோல்களை கடத்துவதாக பெரியாறு புலிகள் சரணாலய ரேஞ்சர் சஞ்சீவனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனால் உஷாரான அவர் பாரஸ்டர் ஆபிரகாம் மேத்யூ தலைமையிலான வனத்துறையினருடன் சேர்ந்து கேரளஎல்லையில் சந்தேகப்படும் வகையில் வரும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

    இதனிடையே 2 காய்கறி மூட்டைகளுடன் ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அவரை வழிமறித்த அதிகாரிகள் அதுகுறித்து கேட்ட போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் காய்கறி மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் நரித்தலையுடன் கூடிய 14 நரித்தோல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து நரித்தோல்களை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த தேனி, ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×