search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருட்டு
    X

    பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருட்டு

    பிரம்மதேசம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள ஆலங்குப்பத்தில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நள்ளிரவில் அந்தபகுதிக்கு மர்ம மனிதர்கள் வந்தனர். அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கிழித்து எறிந்தனர்.

    அலுவலகத்தில் உள்ள இரண்டு மின்விசிறிகள் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் ஊராட்சி செயலாளர் சதாசிவம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×