search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர்
    X

    மதுரை ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர்

    மதுரை ரவுடி கொலையில் 2 பேரை விருதுநகர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர்-சாத்தூர் சந்திப்பு சாலையில் விருதுநகர் பஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

    அவர்கள் மிக வேகமாக வருவதை கண்ட போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரின் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட போலீசார் அதிரடியாக விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மதுரை ரவுடி மகாமுனி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. அவர்களது பெயர் சரவணகுமார் (வயது45), களஞ்சியம் (31) என்பதும் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மதுரை தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று 2 பேரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட மகாமுனியின் மனைவி மகேஸ்வரிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

    இதனை மகாமுனி கண்டித்ததால் பாலமுருகன் அவரது நண்பர்கள் சரவணன், செந்தில், களஞ்சியம், சரவணக்குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் 2 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×