என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609280946549458_kavindapadi-gandhi-temple-2nd-gandhi-jayanti-celebration_SECVPF.gif)
கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகள் (விக்கிரகங்கள்) உள்ளது. காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகளுக்கு பூஜையும் வழிபாடும் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி இந்த காந்தி கோவிலில் காந்தி ஜெயந்தி திருவிழா சிறப்பாக நடக்கும். இதேபோல் இந்தாண்டும் வரும் (அக்டோபர்) 2-ந் தேதி ஜெயந்தி விழா உற்சாகத்துடன் கொண் டாடப்படுகிறது.
விழாவையொட்டி வரும் 1-ந் தேதி மாலை 4மணிக்கு வாணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருகிறார்கள். தீர்த்தத்துடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள் காந்தி கோவிலை அடைந்ததும் அங்கு மகாத்மா காந்தி அன்னை கஸ்தூரிபாய் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் 11 மணிவரை சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனைகள் நடக்கிறது.
விழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு காந்தி - கஸ்தூரிபாயை வழிபடு கிறார்கள்.அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
காலை 11 மணிக்கு மேல் மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)