search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்: டிரைவர் கைது
    X

    பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்: டிரைவர் கைது

    நன்னிலம் அருகே பஸ் மோதி படுகாயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


    நன்னிலம் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு நல்லமாங்குடி பெரியார் நூலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நன்னிலத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதியை சேர்ந்த மதியழகன் (36) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×