search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    பாளையில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    பாளையில் இன்று காலை நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    பாளை தியாகராஜ நகர் 7-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மனைவி ஜானகி(வயது 61). இன்று காலை இவர் அப்பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் ஜானகி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம்.

    திருடர்கள் நகையை பறித்ததும் ஜானகி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அக்கம்பக்கத்தில் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×