search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டில் மாணவிகளை ஈவ்டீசிங் செய்த வாலிபர்கள் கைது
    X

    பேரணாம்பட்டில் மாணவிகளை ஈவ்டீசிங் செய்த வாலிபர்கள் கைது

    பேரணாம்பட்டில் மாணவிகளை ஈவ்டீசிங் செய்த வாலிபர்கள் போலீசார் கைது செய்தனர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு துலுக்கானா வீதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (22), சின்னபஜார் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). நண்பர்களான இருவரும், பேரணாம்பட்டு தெற்குமேடு முருகன் கோவில் தெருவில் உள்ள ஒரு கடையின் அருகே நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற மாணவிகளை ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.

    அதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் பழனி, மனைவி அமுதவள்ளி, மகள் ஆகியோரை வாலிபர்கள் 2 பேரும் கல்லால் தாக்கியதாக தெரிகிறது. அதில் அமுதவள்ளி காயம் அடைந்து, பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரபாகர், மனோஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×