search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் மாயம்
    X

    கோவையில் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் மாயம்

    கோவையில் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் கவுசல்யா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக பள்ளி செல்லாமல் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கவுசல்யா திடீரென காணாமல் போய்விட்டார். அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் கவுசல்யா கிடைக்கவில்லை.

    இது குறித்து வெங்கடேஷ் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கவுசல்யாவை தேடி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் புவனேஷ்வரி (17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ளவர்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான புவனேஷ் வரியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×