என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609271519505052_Child-molestation-youth-arrested-near-denkanikottai_SECVPF.gif)
X
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
By
மாலை மலர்27 Sep 2016 9:49 AM GMT (Updated: 27 Sep 2016 9:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேன்கனிக்கோட்டை அருகே 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குண்டுப்பேட்டை குடிசல்பை கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாரப்பன் மகன் சந்திரன்(வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சிறுமியிடம் கடையில் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று இந்த சம்பவத்தை அவர் அரங்கேற்றி உள்ளார்.
இதனால், வீட்டிற்கு சிறுமி அழுது கொண்டே வந்தார். மகள் அழுது கொண்டு இருப்பதை கண்டதும், பதறி துடித்த தாய் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.
அப்போது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகளை சேர்த்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் சந்திரனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில், போலீசாரிடம் சந்திரன் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
4 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குண்டுப்பேட்டை குடிசல்பை கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாரப்பன் மகன் சந்திரன்(வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சிறுமியிடம் கடையில் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று இந்த சம்பவத்தை அவர் அரங்கேற்றி உள்ளார்.
இதனால், வீட்டிற்கு சிறுமி அழுது கொண்டே வந்தார். மகள் அழுது கொண்டு இருப்பதை கண்டதும், பதறி துடித்த தாய் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.
அப்போது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகளை சேர்த்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் சந்திரனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில், போலீசாரிடம் சந்திரன் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
4 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)