search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
    X

    தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

    தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காளப்பட்டி சாலையில் நேருநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டார் பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் அவசரமாக ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து நாகராஜன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×