search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லி அருகே ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    பூந்தமல்லி அருகே ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    பூந்தமல்லி:

    அய்யப்பன்தாங்கலை அடுத்த பெரிய கொளத்துவாஞ்சேரி கே‌ஷவர்த்தினி நகரில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு இரவு காவலாளி இல்லை.

    இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் எம்.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை உடைத்துள்ளார். அதன்பின் இரும்பு கம்பியால் ஏ.டி.எம்மை உடைத்தார்.

    ஏ.டி.எம்மை உடைத்தால் மும்பையில் உள்ள அந்த வங்கி தலைமை அலுவலகத்துக்கு எச்சரிக்கை தகவல் செல்லும் வகையில் வசதி உள்ளது. மர்ம நபர் ஏ.டி.எம்மை உடைத்ததும் எச்சரிக்கை தகவல் வங்கி தலைமை அலுவலகத்துக்கு சென்றது.

    உடனே வங்கி அதிகாரிகள் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம நபர் இல்லை. ஏ.டி.எம்மை உடைக்க முடியாததால் அவர் தப்பிச்சென்று விட்டார். இதனால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.
    Next Story
    ×