search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர்  பலி
    X

    வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர்  பலி

    வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் மொன்னாவேட்டை சேர்ந்தவர் அஜித் குமார் (21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். வெங்கல் மொன்னாவேடு அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது அஜித்குமார் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அஜித்குமார் இறந்தார். விபத்து நடந்த வுடன் மோதிய வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    Next Story
    ×