search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணவாளநகர் அருகே லாரிகள் மோதல்: டிரைவர் பலி
    X

    மணவாளநகர் அருகே லாரிகள் மோதல்: டிரைவர் பலி

    மணவாளநகர் அருகே லாரிகள் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    காஞ்சீபுரத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி மினி லாரி திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த டிரைவர் பாலகுமரன் (வயது 35) லாரியை ஓட்டினார்.

    மணவாளநகரை அடுத்த போளிவாக்கம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு லாரி திடீரென மினி லாரி மீது மோதியது.

    இதில் மினி லாரியின் முன்பகுதி நசுங்கியது. சம்பவ இடத்திலேயே டிரைவர் பாலகுமரன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்துக்குள்ளான மற்றொரு லாரியின் டிரைவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜி பலத்த காயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×