search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற 5 பேர் கைது
    X

    வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற 5 பேர் கைது

    சேலத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலத்திற்கு சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பதாக சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    இவர்களை கைது செய்ய அவர் உத்தரவிட்டார். இதன் பேரில் அனைத்து பகுதியிலும் போலீசார் கண்காணித்து லாட்டரி சீட்டுக்களை விற்ற அம்மாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (வயது 27), செவ்வாய்பேட்டையை சேர்ந்த வேலு (வயது 52), சிவதாபுரத்தை சேர்ந்த செல்வம் (வயது 37), சேலம் சங்கர் நகரை சேர்ந்த கண்ணன்(வயது 42), சேலம் டவுனை சேர்ந்த செல்வம் (வயது 47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மறைத்து வைத்து இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×