என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சைதாப்பேட்டையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா: மா.சுப்பிரமணியன் ஏற்பாடு
சென்னை:
தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை வி.கே.எம். மகாலில் முப்பெரும் விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கருத்தரங்குக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமை வகிக்கிறார்.
‘இதயங்களால் ஓர் இரும்புக் கோட்டை’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கருப்பாய் ஒரு வெளிச்சம் என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகிறார்கள்.
‘எளிமையாய் ஒரு வலிமை’ என்ற தலைப்பில் கவிஞர் ராமலிங்கம், குள்ளமாய் ஓர் இமயம்என்ற தலைப்பில் பேராசிரியை பர்வீன் சுல்தானா, ‘மூத்தோர்க்கும் அண்ணன்’ என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பேசுகிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் செய்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் முப்பெரும் விழா கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அணிகளின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்