search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதாப்பேட்டையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா: மா.சுப்பிரமணியன் ஏற்பாடு
    X

    சைதாப்பேட்டையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா: மா.சுப்பிரமணியன் ஏற்பாடு

    தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை வி.கே.எம். மகாலில் முப்பெரும் விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை வி.கே.எம். மகாலில் முப்பெரும் விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    கருத்தரங்குக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமை வகிக்கிறார்.

    ‘இதயங்களால் ஓர் இரும்புக் கோட்டை’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கருப்பாய் ஒரு வெளிச்சம் என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகிறார்கள்.

    ‘எளிமையாய் ஒரு வலிமை’ என்ற தலைப்பில் கவிஞர் ராமலிங்கம், குள்ளமாய் ஓர் இமயம்என்ற தலைப்பில் பேராசிரியை பர்வீன் சுல்தானா, ‘மூத்தோர்க்கும் அண்ணன்’ என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் செய்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் முப்பெரும் விழா கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அணிகளின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×