என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புழலில் கைதிகளுக்கு கஞ்சா- செல்போன் கொடுக்க முயற்சி: 4 பேர் கைது
செங்குன்றம்:
புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் நேற்று இரவு போலீசார் புழல் கதிர்வேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் 4 செல்போன்கள், 300 கிராம் கஞ்சா இருந்தது.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை புழல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை ஜாபர்கான் பேட்டை யை சேர்ந்த வினோத், அருண், புழலை சேர்ந்த, சதிஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் என்றும் அவர்கள் 4 செல்போன்களையும், கஞ்சாவையும் புழல் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளி கைதிகள் ரமேஷ் உள்பட 6 பேருக்கு சப்ளை செய்ய வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன், 300 கிராம் கஞ்சா 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்