search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் முகவூரில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
    X

    ராஜபாளையம் முகவூரில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

    சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் முகவூரில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ராஜபாளையம்:

    முகவூர் காமராஜர் சிலை முதல் முத்துச்சாமியாபுரம் மாலையம்மன் கோவில் வரை உள்ள சாலைகள் மற்றும் முகவூர் முதல் சொக்கநாதன்புத்தூர் சாலை, முகவூர் முதல் அசையாமணி விலக்கு வரை உள்ள சாலைகள் பழுதாகி, பள்ளம், மேடுகளாக உள்ளதால் பொதுமக்களும், வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்வதற்கு மிகுந்த சிரம்மப்படுகின்றனர்.

    எனவே இந்த சாலையை செம்மைப்படுத்தி புதிய தார்ச்சாலை அமைக்கக் கோரி ராஜபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் முகவூர் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி தி.மு.க. சார்பில் முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கடுங்கோண் பாண்டியன், தொந்தியப் பன், சுரேஷ், சபரிமலை ஆகியோர் வரவேற்று பேசினர்.

    ராஜபாளையம் நகர செயலாளர் பேங்க் ராம மூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், சேத்தூர் பேரூர் செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் அனந்தப்பன், பொருளாளர் ஜஸ்டின் சவரிராஜ் என்ற காந்தி, மாவட்ட பிரதிநிதி சண்முக சுந்தரம், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மாலதி உள்பட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் கணேசன், பதிவு ஹாமால், நகர துணை செயலாளர் சரவணன், பன்னீர்செல்வம், உதுமான், வேல்முருகன், கருப்பழகு, நைனார் முகமது, இச்சாஸ் இப்ராகின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×